Sunday 9 November 2014

அன்பெனும் அமிழ்தம்

                                                                                                         
     அன்பு ஆற்றல் மிக்கது.

          ஒரு பிளவுபட்ட குடும்பம் குழந்தையின் அன்பால் ஒன்று சேர்வது உண்டு

  . காதலனுக்குமண்ணில் மாமாலையும் ஒரு சிறுகடுகாய்தோன்றக் காரணம் காதலி காட்டும் அன்பின் வலிமைதான்.

          மனைவி காட்டும் தன்னலமற்ற அன்பு, நெறிகெட்டுச் செல்லும் கணவனை நல்வழிப்படுத்தும் ஆற்றல் மிக்கது.

        இன்றளவும் குடும்பம் என்னும் கட்டுக்கோப்புக் குலையாமல் இருப்பதற்குக் காரணம் அன்னை பொழியும் அன்பின் வலிமை தான்.

    குடும்பத் தலைவனாய் விளங்கும் தந்தை ஓய்வின்றி உழைப்பதும் ஆழ்மனதில் கிக்கும் அன்பின் பேராற்றலால்தான்.

   சாதி, மதம், இனம் பாராமல் அன்பு காட்ட வேண்டும். மற்ற எல்லா உயிர்களிடத்தும் அன்பைப்  பொழிய வேண்டும். பகைவரையும் மன்னித்து அன்பு செய்ய வேண்டும்.  இந்த அன்பு நெறியைத்தான்நின்னோடு ஐவரானோம்என்று குகனையும், ‘நின்னோடு அறுவரானோம்என்று அனுமனையும், ‘நின்னோடு எழுவரானோம்என்று விபீடனையும் இராமன் தம்பியராக்கிக் கொள்வதாய் கம்பன் படைத்துக்காட்டுகிறான். இவ்வன்பு நெறி தழைக்குமாயின் உலகமாந்தார்  உவகையுடனும் அமைதியுடனும் வாழலாம்.
அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சே. இக்கூற்று அன்புக்கும் பொருந்தும். தாயும் தந்தையும் தம் குழந்தைகளிடத்து அளவுக்கு அதிகமான அன்பைச் செலுத்தி, அதாவது செல்லம் கொடுத்து, குழந்தையின் போக்குக்கு விட்டு,  பின்னர்  துன்பப்படுவதுண்டு.

    கண்மூடித்தனமான அன்பு என்று ஒரு வகையும் உண்டு. இது மிகவும் ஆபத்தானது. இது காலப்போக்கில் வெறியாக மாறிவிடும். மொழியின் மீது அன்பு இருக்க வேண்டும். மொழி வெறியாக மாறக்கூடாது. மதத்தின் மீது ப்ற்றுபு இருக்கலாம். அது ஒருபோதும் மதவெறியாக மாறுதல் கூடாது.

    நம் நாட்டில் இல்லறம் என்பது வற்றாத அன்பின் அடிப்படையில் அமைவது. ஆயினும் அவ்வற்றாத ஊற்று வரதட்சணைச் சிக்கல்களால் வறண்டு போவதைப் பார்க்கிறோம். செல்வ மகளையும் கொடுத்து, செல்வத்தையும் கொடுக்க ஏழைத் தந்தையால் இயலுமா? பாரதியார் கண்ணம்மாவை நோக்கி, அன்பொழுக செல்லமடி நீ எனக்கு சேமநிதி நானுனக்கு என்று கூறுவதைப் போல, அருள் காட்டி ம் புரியும் இளைஞர் கூட்டம் பெருக வேண்டும். வள்ளுவர்  கூறுவது போல், அன்பு பண்பாகவும், அறம் பயனாகவும் உள்ள இல்லங்கள் பெருக வேண்டும். கணவனின் மனமும் மனைவியின் மனமும் அன்பால் இணைக்கப்பட வேண்டும். மனமுறிவுதான் மணமுறிவுக்குக் காரணம்.

   கிணற்று நீர் இறைக்க இறைக்கத்தான் ஊறும். அதுபோல் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்ட காட்டத்தான், அன்பு பெருகும். பிற உயிர்களிடத்து அன்பு காட்டி, அதனால் கிடைக்கும் இன்பத்தை அனுபவிக்க வேண்டும். இவ்வின்பத்தை அனுபவித்தவர்  தாயுமானவர். 
           “அன்பர் பணிசெய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால்
           இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமேஎன்று கூறுகிறார்.

        “காக்கை குருவிகள் எங்கள் ஜாதிநீள்
          கடலும் மலையும் எங்கள் கூட்டம்
 என்று அஃறிணைப் பொருள்களிடத்தும் அன்பு காட்டியவர் பாரதியார்.

  வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று அன்பின் மிகுதியால் நெஞ்சு  நெக்குருகிப் பாடியவர் வள்ளலார்.

   ஒரு முறை காந்தியடிகளின்  உதவியாளர்  மீராபென் விடுத்த வேண்டுகோளின்படி, ஆசிரமத்தில் வசித்த  இளைஞர்கள் சிலர்  இரவு நேரத்தில் சுந்தழையைக் கொத்துக் கொத்தாகப் பறித்து வந்தனர். அதைக் கண்ட காந்தியடிகள், “மரங்களும் நம்மைப்போல் உயிருடையவை. நம்மைப்போலவே வளர்கின்றன; முகர்கின்றன; உண்கின்றன; பருகுகின்றன; உறங்குகின்றன .அவை இரவில் ஓய்வு பெற்று உறங்கும் போது தழைகளைப் பறித்தல் தவறுஎன்று கூறினாராம்!

   இன்றைக்குச் ரியாக நூற்றி இருபத்தியோர் ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் (9.11.1893)மெரிக்காவில் சிக்காக்கோவில் நடைபெற்ற ர்வமத மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றினார்.,   ‘மெரிக்க நாட்டுச் சகோதரர்களே, சகோதரிகளேஎன்று  கூறி உரையைத் தொடங்கியபோது எழுந்த கரவோலி அடங்க பத்து நிமிடம் ஆனதாம்!

      எனவே, நாடு, மொழி, இனம் கடந்து, யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்னும் கணியன் பூங்குன்றனாரின் வழியில்.எல்லோரும் நம்  றவினர் என ஒவ்வொருவரும் எண்ணி வாழத் தொடங்கினால் உலகில் போர்  ஏது?  பூசல் ஏது?


.     அண்மைக்காலமாக, மனித மனங்கள் மெல்ல மெல்ல பாலைவனங்கள் ஆகிவருகின்றன.  இறைவன் அன்பு மயமானவன். எனவேதான் எல்லா மதங்களும் அன்பைப் போதிக்கின்றன. அன்பெனும் அமிழ் நீர் எல்லோருடைய உள்ளங்களிலும் மீண்டும் பெருக்கெடுக்க  வேண்டும். இதற்கான வழிகளைச் சிந்திப்போம்.

1 comment:

  1. Sir, Your writing proves you are a very versatile scholar. It is an anthology of our Tamil Literature. You have written this at the appropriate time. Pl. continue such powerful writings. God bless you.
    by,
    Judge M.Pughazhendi

    ReplyDelete