Saturday 29 August 2015

சிந்தை கவர்ந்த சிவா

    கணினித் துறையில் ஒரு புரட்சி செய்ய, ஒரு கருப்பு நிலா மும்பை நகரில் 1963 ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் தேதியன்று உதித்தது. இணைய வரலாற்றில் இமெயில் என்னும் புதிய மின்னஞ்சல் முறையைக் கண்டுபிடித்து அமெரிக்க நாட்டின் அரசிடமிருந்து காப்புரிமையைப் பெறப்போகும் குழந்தை இது என தந்தை வெள்ளயப்ப அய்யா துரைக்கும் தெரியாது., தாயார் மீனாட்சி அய்யா துரைக்கும் தெரியாது.

Saturday 15 August 2015

விடுதலை உணர்வை விதைப்போம்

    1993 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்துக் குழந்தைகளுடன் சேர்ந்து சுதந்திர தினவிழாவைக் கொண்டாடும் பேறு வாய்க்கப் பெற்றவன் நான்.

   கோபி வைரவிழா மேல்நிலைப் பள்ளியில் விடுதி மாணவர்கள் சிலரும் விருப்பமுள்ள பிற மாணவர்கள் ஆசிரியர்கள் சிலரும் சேர்ந்து கொடியேற்றிக் கொண்டாடுவது வழக்கமாக இருந்தது.

Saturday 8 August 2015

படித்தால் மட்டும் போதுமா?

  இன்றைய(7.8.15) இந்து ஆங்கில நாளிதழில் வந்த செய்தி ஒன்றைப் படித்து  முடித்ததும் இந்தியாவில் வழங்கப்படும் கல்வி மீதிருந்த எனது நம்பிக்கை தவிடுபொடி ஆகிவிட்டது.