Thursday 31 March 2016

விருதும் வியப்பும்

   நம் நாட்டில் பல்வேறு விதமான விருதுகள் மாநில மத்திய அரசுகளால் வழங்கப்படுகின்றன. சில விருதுகள் தரப்படுகின்றன. சில விருதுகள் பெறப்படுகின்றன. விருது பெறும் சிலரால் விருதுக்குப் பெருமையும் ஏற்படுகின்றன. வேறு சிலரால் விருதுக்குச் சிறுமையே ஏற்படுகின்றன.

Saturday 26 March 2016

நல்ல வெள்ளி

  நல்ல வெள்ளி அன்று  பள்ளிக்கு விடுமுறைதான். மதங்கள் தொடர்பான விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகளையும் நடத்துவது கூடாது என்பதில் உறுதியாக இருந்ததால், பள்ளிக்குச் செல்லாமல் சற்று ஓய்வாக இல்லத்தில் இருந்தேன்.

Tuesday 22 March 2016

பள்ளிக்கு ஒரு மனநல ஆலோசகர்

   தேர்தல் சூடு பிடித்துள்ள இந்தக் காலக்கட்டத்திலும், ஊடகங்களில் வரும்  தேர்வு தொடர்பான சில செய்திகள் நம் கவனத்தைக் கவர்கின்றன. நடுவண் இடைநிலை வாரிய கணிதத் தேர்வு பற்றிய கூக்குரல் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது.

Friday 18 March 2016

மெல்லத் தமிழ் இனி வாழும்

   இந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள்  வளர்ந்து பெரியவர்களாகும்போது எழுத்தாளர்களாக, கவிஞர்களாக உருவெடுப்பார்கள். என்ன அழகாக எழுதுகிறார்கள்! கண்களில் ஒற்றிக் கொள்ளலாம்! பக்கம் பக்கமாகப் படித்தாலும் ஓர் எழுத்துப் பிழையை, ஓர் ஒற்றுப் பிழையைக் காண முடியவில்லை! நூற்றுக்குப் பத்துக் குழந்தைகள் அப்படி எழுதுவதாக  நினைக்காதீர்கள். அத்தனைக் குழந்தைகளும் தவறில்லாமல் எழுதுகிறார்கள்.

Sunday 13 March 2016

கவரி வீசிய காவலன்

                                                              
                                                                 வரலாற்று நாடகம்

                                                       (முனைவர் அ கோவிந்தராஜூ)

             காட்சி 1   இடம்: சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை
                              அரண்மனை

வாயிற்காவலர்: யார் நீங்கள்?
மோசிகீரனார்:  வாயிற்காவலரே வணக்கம். நம் மன்னரைக் காண
                   வந்துள்ளேன்.  

Friday 11 March 2016

உண்டால் அம்ம இவ்வுலகம்



 இளம்பெருவழுதி என்னும் சங்கப் புலவன் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாடிய பாடல் இதுவாகும். இந்த உலகம் அழிந்து படாமல் இன்னும் இயங்கிக் கொண்டு இருப்பதற்குக் காரணம் யார் என ஒரு வினாவை நாம் கேட்டால் அதற்குரிய விடையாக அமைகிறது இப்பாடல்.

Sunday 6 March 2016

தெனாலிராமனும் நானும்

   
 “அடியே! நல்லா கவனி! இண்ணைக்கு ராத்திரி வெளியூர் போறமில்ல. நம்ம நக நட்டு முட்டை எல்லாம் இந்த இரும்பு பெட்டியில வச்சி பூட்டி நம்ம தோட்டத்து கிணத்துல போட்டுடுவோம். ஊட்டுல வச்சிட்டுப்போனா திருடனுங்க எடுத்திட்டு போய்டுவானுங்க” என்று தெனாலிராமன் தன் மனைவியிடம் சொன்னதை திருடர்கள் எப்படியோ ஒட்டுக் கேட்டுவிட்டார்கள்.

Tuesday 1 March 2016

சிற்றுலாவில் வந்த சிக்கல்

   

    சுற்றுலா(tour) செல்வதைவிட சிற்றுலா(picnic) செல்வது எளிது என்பதால் ஊட்டி சிற்றுலாவிற்கு ஏற்பாடு செய்தேன். 47 மாணவியர், 7 ஆசிரியர்களுடன் ஊட்டிக்குச் சிற்றுலா சென்றோம். சாய்வு வசதியுள்ள இருக்கைகளுடன் கூடிய புதிய பேருந்தில் பயணித்தோம். திறமையும் அனுபவமும் உடைய ஓட்டுநரின் கைவண்ணத்திலும் கால் வண்ணத்திலும் பேருந்துப் பயணம் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.